கமலா நீ எல்லாம் ஒரு பாட்டியா மயூவ இப்படி திட்டுறியே…ஒழுங்க வெளில பொய்டு தனது அம்மாவை பார்த்து ராதிகா.. ஃபுல் மப்பில் கோபி செய்த செயல்..

பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் ராதிகா உட்கார்ந்து கொண்டிருக்கும் பொழுது எதற்காக நீங்க பொய் கேஸ் போட்டீர்கள் என தன்னுடைய அம்மாவிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் மயூவிடம் இந்த விஷயத்தை எப்ப சொல்லணும் உனக்கு தெரியாதா என்கிட்ட சொல்லவே இல்லையே என கேட்கிறார்.

நீங்க எல்லாம் எப்ப பாரு சண்டை போட்டுக்கிட்டே இருக்கீங்க உங்க கிட்ட சொன்னா என்ன திட்டுவீங்கன்னு எனக்கு பயம் எனக் கூறுகிறார் மயூ. மேலும் எங்க கிட்ட சொல்லலனாலும் அங்க போய் மட்டும் சொல்ல தெரியுதா என கமலா மயூவை திட்டுகிறார் அதுமட்டுமில்லாமல் ராதிகா எல்லாரும் சேர்ந்து என்ன முட்டாளாக்கிட்டீங்க நான் தான் இப்ப எல்லார்கிட்டயும் அசிங்கப்பட்டு நிற்கிறேன் என கூறுகிறார்.

உடனே சண்டை போட்டுக் கொண்டு ராதிகா இப்ப அவர் வருவார் அவர் முகத்துல நான் எப்படி முழிப்பேன் அவர் வந்து கத்துனா நீங்களே பதில் சொல்லிகீங்க என சொல்லிவிட்டு ராதிகா உள்ளே செல்கிறார். மற்றொரு பக்கம் கோபி தன்னுடைய நண்பரிடம் நடந்த கதை அனைத்தையும் சொல்லி புலம்பி கொண்டிருக்கிறார் ஃபுல் குடிபோதையில் அவரிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.

நான் மனுஷனே கிடையாது பெத்த அம்மாவை சந்தேகப்பட்டுட்டேன் அப்பவே பாக்கிய சொன்னா உங்க அம்மா எவ்வளவு பீல் பண்றாங்க நீங்க கொஞ்சம் கூட அவங்களை புரிஞ்சிக்க மாட்டீங்களான்னு கேட்டா அதெல்லாம் என் கண்ணை மறைச்சிடுச்சு. ஆனா மயூ இவ்வளவு தைரியமா சாட்சி சொல்லி இருக்கிறது நமக்கு நல்லதா போச்சு என கோபியின் நண்பன் கூற இதுக்கு மேல நான் அந்த வீட்டுக்கு போற மாதிரி இல்லை என கோபி கூறுகிறார்.

அப்படியெல்லாம் சொல்லாத கோபி நானே உன்னை வீட்டுல டிராப் பண்றேன் என கேட்கிறார் அதெல்லாம் முடியாது நான் இனிமே போக மாட்டேன் நான் பாத்துக்குறேன் ஆனா சாகமாட்டேன் என கோபி கூறுகிறார் மற்றொரு பக்கம் ராதிகா உட்கார்ந்து கொண்டிருக்கும் பொழுது மையுவை திட்டிக் கொண்டிருக்கிறார் கமலா. உடனே மையூரா  தன்னுடைய அம்மா ராதிகாவிடம் சென்று உக்காருகிறார் அப்பொழுது நீ எப்படி ஸ்கூல்ல இருந்து வந்த என கேட்க பாக்கியா ஆன்டி தான் என்ன கூப்பிட்டுக்கொண்டு போனார்கள் என கூறுகிறார்.

அப்போ அவங்களுக்கு முன்னாடியே விஷயம் தெரியுமா என கேட்க அப்பொழுது மையூரா நான் ஸ்கூல் சீக்கிரம் விட்டதால் பார்க்கில் உட்கார்ந்து கொண்டிருந்தேன் அப்பொழுது பாக்யா வந்தாங்க அவங்க அழுதுகிட்டு இருந்தாங்க அதனால நான் உண்மைய சொல்லிட்டேன் என கூறுகிறார் நீ பார்த்தியா பாட்டி என்ன தள்ளி விடவில்லையா என கேட்க ஈஸ்வரி பாட்டி உங்கள தள்ளிவிடவில்லை நீங்கள் தான் பிளவர் வாஷ் மேல் கால் வைத்து தடுக்கி விழுந்தீர்கள் ஈஸ்வரி பார்ட்டி உங்கள பிடிக்க தான் வந்தாங்கள் என கூறுகிறார்.

மயூ பேசப்பேச கமலா பதிலுக்கு அவரை இரிடேட் செய்வது போல் பேச ஒழுங்கா இங்க இருந்தா இரு எதுவும் பேசாம இரு இல்லனா வெளியில போ என தன்னுடைய அம்மாவை ராதிகா கூறுகிறார். உடனே கண் கலங்க ராதிகா மயூவை  அரவணைக்கிறார் அது மட்டும் இல்லாமல் நீங்க தானே உண்மையை சொல்லணும்னு சொல்லி இருந்தீங்க என மயூ பேச ராதிகா மயூவை கட்டிப்பிடிக்கிறார்.

மற்றொரு பக்கம் பாக்யா விதவிதமாக சமைத்து அனைவரும் சாப்பிட உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள் இன்னைக்கு பெரிய கண்டத்தில் இருந்து அத்தை தப்பித்திருக்கிறார்கள் அதனால் இவ்வளவும் சமைத்துள்ளேன் என கூறுகிறார் அந்த சமயத்தில் கோபி பாக்யா வீட்டிற்கு வருகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.