பொய் கேசா போட்ட வீட்டுக்கே வரக்கூடாது தனது அம்மாவை துரத்தி அடித்த ராதிகா.. வெளியே வந்த ஈஸ்வரி..

பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் கோர்ட்டில் ஈஸ்வரியின் கேஸ் வருகிறது அப்பொழுது மையூ அம்மாவை பாட்டி தள்ளிவிடவில்லை ஃப்ளவர் வாஷ் தடுக்கி தான் அம்மா விழுந்தார் அப்பொழுது அம்மாவை பிடிக்க தான் ஈஸ்வரி பாட்டி வந்தார்கள் என உண்மையை கூறி விடுகிறார் இதனால் ராதிகா மற்றும் ராதிகாவின் அம்மா கமலா அதிர்ச்சடைகிறார்.

உங்கள் சொந்த வெறுப்புக்காக இப்படி பொய் கேஸ் கொடுத்துள்ளீர்களே என நீதிபதி திட்டுகிறார் மேலும் போலீசை அழைத்து கேஸ் கொடுக்க வந்தாங்கன்னா அதை ஒழுங்கா விசாரிக்க மாட்டீங்களா என கேட்கிறார்கள். சாரி சார் என அவர் மன்னிப்பு கேட்டுவிட்டு உட்காருகிறார் அதன் பிறகு நீதிபதி தவறாக கொடுத்த வழக்கால் ஈஸ்வரியை விடுதலை செய்கிறோம் என தீர்ப்பு வழங்குகிறார்.

அனைவரும் வெளியே வந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது ராதிகா மையூ கமலா மூன்று பேரும் வர பாக்யா மயூவை கட்டி பிடிக்கப் போகிறார் அப்பொழுது வெடுக்கென மையவை பிடித்து இழுக்கிறார் ராதிகா, அதுமட்டுமில்லாமல் பாக்யாவிடம் உங்கள நான் கவனிச்சிக்கிறேன் என மிரட்டி விட்டு செல்கிறார்.

மேலும் பாக்கியா எதற்காக லேட்டாக வருகிறார் என அனைவரும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அதற்கு இதுதான் காரணம் என பழனிச்சாமி கூறுகிறார். பழனிச்சாமி பாதுகாப்பில் தான் மயூவை அழைத்து வந்தோம் எனவும் பாக்கியா கூறுகிறார். காரில் ஏறும் பொழுது ராதிகா கமலாவை பார்த்து பொய் கேஸா கொடுத்த என்னை இப்படி அசிங்கப்படுத்திவிட்டியே எல்லாரும் முன்னாடியும் நீயெல்லாம் ஒரு அம்மாவா.

வீட்டு பக்கம் வந்துராத வந்த அவ்வளவுதான் என துரத்தி அடிக்கிறார். அடுத்த காட்சியில் வீட்டில் உள்ள ஜெனி அமிர்தா இனியா அனைவரும் பாட்டி எப்பொழுது வருவார் என காத்துக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது செல்வி வந்து பாட்டி வந்து கொண்டிருக்கிறார் நான் முதலில் ஆட்டோவில் வந்தேன் ஆரத்தி  ரெடி பண்ணுங்கள் என கூற ஆரத்தி அந்த சிவப்பு கலர் பெயிண்ட் இல்லையே என ஜெனி கேட்கிறார்.

உடனே ஈஸ்வரி வந்ததும் உள்ளே சென்று குளித்துவிட்டு வாருங்கள் என கூறுகிறார்கள் குளித்து முடித்ததும் ஈஸ்வரி உட்கார்ந்து கொண்டிருக்கும் பொழுது பாக்யா வந்து பொட்டு ஏன் வைக்கவில்லை என பொட்டு வைத்து விடுகிறார் அது அப்பொழுது ஈஸ்வரி பாக்கியாவை கட்டிப்பிடித்து அழுகிறார் மேலும் பாக்கியா ஈஸ்வரிக்கு ஆறுதலாக பேசுகிறார்கள் இத்துடன் இன்றைய எபிசோட் முடிகிறது.