மயூவால் ராதிகாவுக்கு வந்த தலைவலி.. கமலாவை பார்வையாலேயே எரிக்கும் கோபி.. இரும்புப் பெண்மணி பாக்கிய எடுத்த அதிரடி முடிவு…

பாக்கியலட்சுமி சீரியலில் சமீபத்திய எபிசோடில் ஈஸ்வரி மீது ராதிகா மற்றும் ராதிகாவின் அம்மா கமலா கேஸ் கொடுத்துள்ளார்கள். அதாவது ராதிகாவின் கரு கலைந்ததற்கு காரணம் ஈஸ்வரி தான் கொலை செய்யும் முயற்சி செய்கிறார் என கே எஸ் கொடுத்துள்ளதால் ஈஸ்வரியை அரெஸ்ட் செய்து காவலில் வைத்து விசாரிக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி ஒவ்வொருவராக விசாரிக்க ஈஸ்வரிக்கு எதிராக அனைத்து சாட்சிகளும் வலுவாக இருக்கிறது.

அதனால் கண்டிப்பாக ஈஸ்வரிக்கு தண்டனை கிடைக்கும் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த சமயத்தில் ராதிகாவின் மகள் மையு பாக்கியாவை எதர்ச்சியாக சந்திக்கிறார் அப்பொழுது மையூ என்னுடைய அம்மாவை ஈஸ்வரி பாட்டி தள்ளிவிடவில்லை அவர்கள் தான் பிளவர் வாஸ்  காலை வைத்து தவறி விழுந்து விட்டார்கள் அப்பொழுது ஈஸ்வரி பாட்டி அவரை பிடிக்க தான் சென்றார் எனக் கூறுகிறார் உடனே அதற்கு பாக்யா இதனை கோர்ட்டில் சொல்ல முடியுமா என கேட்க நான் வந்து சொல்லுகிறேன் என மயூ கூறி விடுகிறார்.

இது தெரியாமல் ராதிகா மற்றும் ராதிகாவின் அம்மா கமலா இருவரும் அந்த ஈஸ்வரி ஜெயிலுக்கு போறதை பார்க்க வேண்டும் என கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். ஆனால் ராதிகாவுக்கு பெரிதாக உடன்பாடு இல்லை இதனால் பெரிய பிரச்சனை வரப்போகிறது என ராதிகா கூற இல்ல நீ அந்த ஈஸ்வரிக்கு பயந்துகிட்டே இரு அதனால தான் ஏறி மிதிக்கிறார் என கமலா கூறுகிறார்.

ஒரு வழியாக ஈஸ்வரி கேஎஸ் கோர்ட்டுக்கு வருகிறது இந்த நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது நீதிபதி அனைவரையும் விசாரித்துவிட்டு ஈஸ்வரி தான் குற்றவாளி என அதிகாரப்பூர்வமாக அறிவித்து கேஸை முடிக்க முயற்சி செய்கிறார் அந்த சமயத்தில் வக்கீல் இடம் பாக்யா சென்று பேசுகிறார் அப்பொழுது மயூவை கோர்ட்டில் ஆஜர்  படுத்துகிறார்கள் இதனை பார்த்த ராதிகா மற்றும் கமலா அதிர்ச்சி அடைகிறார்கள்.

அதேபோல் மயூ சொல்லும் வாக்குமூலத்தால் ஈஸ்வரி பாட்டி வெளியே வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ராதிகாவையும் ராதிகாவின் அம்மா கமலாவையும் கோபி வீட்டை விட்டு வெளியே போங்கள் எனக் கூறியுள்ளார் இந்த நிலையில் பெரும் பிரச்சனை இனிமேல் வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.