rajinikanth

சாகச நாயகனை மிஞ்சும் ரஜினிகாந்த்தின் ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ மிரள வைக்கும் ப்ரோமோ!!

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் ரஜினி. தற்பொழுது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்தா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஹீரோயினாக நயன்தாரா அவர்களும் மற்றும் கீர்த்தி சுரேஷ், மீனா, சூரி ,சதீஷ் போன்ற முன்னணி பிரபலங்கள் பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் எடுக்கப்பட்டு வருகிறது.

சமிபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் சில மாதங்களுக்கு முன்பு டிஸ்கவரி சேனலில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று உள்ளார்.அதன் ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது.

டிஸ்கவரி சேனலில் பிரசித்திபெற்ற நிகழ்ச்சியான ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது இதில் பல முன்னணி பிரபலங்கள் மற்றும் தலைவர்கள் பங்கேற்று வருகின்றனர்.இந்தயாவில் இருந்து பிரதமர் மோடி மற்றும் பல முன்னணி நடிகர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்குஏற்றிந்த நிலையில் தற்பொழுது ரஜினி அவர்களும் இணைந்துயுள்ளார்.

இந்த நிகழ்ச்சியின் சாகச நாயகனாக இருக்கும் பேர் கிரில்ஸ். தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர்கள் கிரில்ஸ்வுடன் இணைந்து சாகச பயணம் மேற்கொண்டுள்ள ப்ரோமோ வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில்  வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

thala

நான் எப்பவுமே தல Fan தான்.! எனக்கு ஒரு தடவ தல கூட Backgroundல நடிச்சாலே போதும். பிரபல கவர்ச்சி நடிகை ஒரே போடு.!

தமிழ் சினிமாவில் யாஷிகா ஆனந்த் அவர்கள் பல படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக தான் பிரபலமடைந்தார்.
இவர் இதற்கு முன்பு தமிழ் சினிமாவில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த கவலைவேண்டாம் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார் இதனைத் தொடர்ந்து அவர் துருவங்கள் பதினாறு, பாடம் போன்ற பல்வேறு படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அவரது வாழ்க்கையை திருப்பி போட்டது 2018 ஆம் ஆண்டு இந்த ஆண்டில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்கின்ற அடுல்ட், காமெடி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது அதுமட்டுமில்லாமல் தனது கவர்ச்சியைக் காட்டி ரசிகர்களை தன்பக்கம் இழுத்துக் கொண்டார் இதனை தொடர்ந்து அவர் பிக்பாஸ் சீசனில் கலந்து கொண்டு மேலும் பிரபலமடையத் தொடங்கினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளிவந்த பிறகு ஜாம்பியா என்ற திரைப்படம் அவருக்கு வாய்ப்பு கொடுத்தது இதிலும் தனது கவர்ச்சியை வெளிக்காட்டி மேலும் ரசிகர்களை தன் பக்கம் இழுத்துக் கொண்டார்.சமூக வலை தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா ஆனந்த் அவர்கள் சமீபத்தில் அஜித்தை பற்றி ட்விட் ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியது அஜித் ட்விட்டரில் சேர வேண்டும் என நானும் ஆசைப்படுகிறேன். என்னைப் போன்று வேறு யாராக இருக்கிறீர்கள் என பதிவிட்டிருந்தார்.

இதனை கண்ட ரசிகர்கள் பலரும் எங்களுக்கும் வேண்டும் என்று ஆசையாக பதிவு செய்தனர் இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட யாஷிகா ஆனந்த் அவர்களை நீங்கள் யாருடைய ரசிகை என்று கேட்டனர் அதற்கு சற்றும் யோசிக்காமல் நான் தல ரசிகை என்று கூறினார். அவரது படத்தில் background காட்சியில் இருந்தால்போதும் எனவும் அவர் தெரிவித்தார் இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட இருந்தார்.

மேலும் யாஷிகா ஆனந்த் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில்  ரசிகர்களுடன் உரையாடுவதை வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கிறார். இவரது பதிவைப் பார்த்த ரசிகர்கள் நீங்கள் அஜித்துடன் நடிக்க ஆசையா என கேட்டனர். ஆமாம் அவரிடம் போய் சொல்லுங்கள் நான் நடிக்க மிகவும் ஆசைப்படுகிறேன் என்று நீங்கள் சொன்னால் கேட்பார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

abirami

குத்துன்னா இப்படி இருக்கணும்.! அபிராமி வீடியோவை பார்த்து மிரளும் ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் நடிகை அபிராமி வெங்கடாச்சலம்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் அபிராமி. இவர் ஹெச் வினோத் இயக்கிய வலிமை படத்தில் தல அஜித்துடன் நடித்திருந்தார். இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அபிராமி வெங்கடாச்சலம் நடித்திருந்தார். இதில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் மேலும் படவாய்ப்புகள் அதிகரிக்க தொடங்கின.

இப்பொழுது ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார் இப்படத்தை ஆல்பர்ட் ராஜா என்பவர் இயக்க உள்ளார். இப்படத்தில் அபிராமி, ஆரி நடிக்கவுள்ளனர் இவர்களை தொடர்ந்து பிக்பாஸில் பிரபலமான லாஸ்லியா அவர்களும் இப்படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது முன்னணி நடிகை போல அபிராமி அவர்களும் தனது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து வருகிறார். இந்த நிலையில் மகளிர் தினத்தை முன்னிட்டு தனது சமூக வலைத்தளத்தில் குத்துச்சண்டையில் பயிற்சி எடுக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை கவர்நதனர்.

இதனை பார்த்த ரசிகர்கள் ஏதோ ஒரு படத்தில் நடிக்க உள்ளார் அதனால் தான் பயிற்சி எடுத்து வருகிறார் எனவும் கூறி வருகின்றனர்.

mumbai-indians

55 பந்துகள் 158 ரன்கள் விளாசிய மும்பை இந்தியன்ஸ் அதிரடி வீரர்.!வைரலாகும் வீடியோ!!

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹார்டிக் பாண்ட்யா ஒரு புதிய விவாதப் பொருளாக மாறியுள்ளார். தற்பொழுது பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்) அணிக்கு எதிரான ரிலையன்ஸ் 1 இன் அரையிறுதி போட்டியில் ஹார்டிக் பாண்ட்யா அவர்கள் 55 பந்துகள் 158 ரன்கள் எடுத்து எதிர் அணி பந்து விச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிளனார் அதுமட்டுமில்லாமல் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தும் படைத்தார்.

இந்த போட்டியின் பொழுது, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஆடுகளத்தை ஆக்கிரமித்து கொண்டு அரங்கத்தில் “ஹார்டிக், ஹார்டிக்” என்று கோஷமிட்டனர். சில ரசிகர்கள் கூட ரிலையன்ஸ் 1 டிரஸ்ஸிங் ரூம் அருகே வந்து தங்கள் நட்சத்திர கிரிக்கெட் வீரரின் பார்வையைப் பெற்றனர்.

வாரத்தின் தொடக்கத்தில் நடந்த குரூப் சி போட்டியில் சிஏஜிக்கு எதிராக 105 ரன்கள் எடுதிர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் மிண்டும் தனது அதிரடியை காட்டியுள்ளார் ஹார்டிக்.இந்தநிலை மேலும் தொடரிந்தால் இந்திய அணிக்கும்,மும்பை இன்டியான்ஸ் அவர் சிறந்த பங்குளிப்பை அள்ளிப்பர் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

இந்த நிலையில் வருகின்ற மார்ச் 12 ஆம் தேதி தர்மசாலாவில் தொடங்கவுள்ள தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 26 வயதான நட்சத்திர கிரிக்கெட் வீரர் அணி இந்தியாவில் சேர உள்ளதாக என்.டி.டி.வி விளையாட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அவரது ரசிகர்கள் இந்திய அணிக்க விளையாட வேண்டுமென கூறிவருகிறார்கள்.