அஜித் – ஷாலினியை இப்பவும் லவ் பண்ணிக்கிட்டு இருக்காரு.. அந்த மனுஷன் போல யாராலையும் இருக்க முடியாது.! புகழ்ந்து பேசிய நடிகர்.

தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் நம்பர்-1 நடிகராக வலம் வருபவர் அஜித். கடைசியாக அஜித் நடிப்பில் வெளிவந்த வலிமை திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலிலும் 200 கோடிக்கு மேல் அள்ளியது.

வலிமை படத்தை தொடர்ந்து அஜித் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார் அப்படி AK 61 திரைப்படத்தில் வலிமை படத்தின் அதே குழுவான இயக்குனர் ஹெச் வினோத் மற்றும் போனி கபூர் தயாரிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

மேலும் இதை தொடர்ந்து அஜித்தின் 62வது திரைப்படதை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். ஒரு கட்டத்தில்  அஜித் நடிப்பில் வெளிவந்த அமர்க்களம் திரைப்படத்தில் அவருடன் இணைந்து நடித்த நடிகை ஷாலினி இருவரும் காதலித்து பின்பு திருமணம் செய்துகொண்டு தற்போது வரை சிறந்த நட்சத்திர தம்பதியினராக வாழ்ந்து வருகின்றனர்.

இவர்கள் இருவருக்கும் ஆத்விக் மற்றும் அனுஷ்கா என்ற இரு குழந்தைகள் உள்ளன.  இந்த நிலையில் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் வக்கீலாக பிரபல பத்திரிக்கையாளர் பாண்டே நடித்திருந்தார். அவர் ஒரு விழா மேடையில் அஜித் பற்றி அவரிடம் கேள்வி கேட்டதற்கு அஜித் ஷாலினி காதல் குறித்த கூறியிருந்தார்.

அவர் கூறியது அஜித்தை போல் யாரும் இருக்க மாட்டார்கள் அவ்வளவு அன்பு, கேர் வீட்டில் எல்லாம் எப்படி இருக்காங்க என மிகவும் அக்கறையுடன் பேசுவார் இதனை அஜித் போனில் பேசிக்கொண்டு இருக்கும்போது நான் பக்கத்தில் இருந்து ஒட்டு கேட்டேன் என அவரே கூறியுள்ளார் அதை கேட்ட ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

Leave a Comment