சொந்த காசை கொடுத்து படக்குழுவினரை மீட்ட அஜித்..! முக்கிய பிரபலம் சொன்ன ரகசியம்

Ajith : நடிகர் அஜித்குமார் திரையுலகில் பல தோல்வி படங்களை கொடுத்து இருந்தாலும் அவருடைய ரசிகர்கள் அவரை எப்பொழுதுமே விட்டுக் கொடுத்ததே கிடையாது. இனி அஜித் எத்தனை தோல்வி படங்கள் கொடுத்தாலும் சரி ரசிகர்கள் விட்டுக் கொடுக்கவே மாட்டார்கள்.

இந்த நிலையில் வலைப்பேச்சு அந்தணன் அஜித்தை எல்லோரும் தூக்கி வைத்து கொண்டாட முக்கிய காரணமாக இருப்பது குறித்து பேசி உள்ளார். சினிமாவையும் தாண்டி அஜித்தின் ரியலான முகம் தான்.. எப்பொழுதும் எந்த நிலையிலும் அனைவரையும் ஒரே மாதிரியாக பார்க்கும் உயர்ந்த பண்புகள் தான் காரணம், எல்லோரையும் சமமாக மதிப்பதும்..

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் முதன் முறையாக நடந்த ஓபன் நாமினேஷன்.. கையெழுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்ட ரவீனா

தனக்கு இருக்கும் செல்வாக்கை தலைக்கு மேல் ஏற்றாமல் ரொம்ப சிம்பிளாக இருப்பது முக்கியமானது படப்பிடிப்பிலும் தன்னுடன் நடிப்பவர்கள் முதல் லைட் மேன் வரை ஒருவரையும் விட்டுக் கொடுக்க மாட்டாராம். அஜித்தின் இந்த குணம் இப்பொழுது இல்லை.. அவர் கோடிகளில் சம்பளம் வாங்குவதற்கு முன்பே இப்படி தான் இருப்பார் என அவருடைய நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.

சினிமாவில் ஆரம்பகாலத்தில் வளர்ந்து வரும் நடிகராக இருந்த அஜித் ஒரு முறை படப்பிடிப்பிறக்காக வெளிநாட்டிற்கு சென்று உள்ளார் அப்பொழுது பட்ஜெட் காரணமாக படக்குழுவினர். தங்கி இருந்த ஹோட்டலுக்கு காசு கொடுக்க முடியவில்லை இதனால் தயாரிப்பாளர் நான் சென்னை சென்று பணம் எடுத்து வருகிறேன் என கூறிவிட்டு போய்ட்டாராம்..

ஜெயிலர் வசூலை முறியடிக்க முடியாமல் தடுமாறும் லியோ.. எந்த இடத்தில் தெரியுமா.?

ஆனால் ஹோட்டல் ஆட்கள் படக்குழுவினரை தொந்தரவு செய்து கொண்டே இருந்தனர் இதனால் டென்ஷனான அஜித் தனது சொந்த செலவில் ஹோட்டல் பில் செட்டில் பண்ணிவிட்டு படக்குழுவினரை மீட்டு எடுத்தாராம். இந்த சம்பவம் “உன்னை தேடி” படத்தில் நடந்ததாக சொல்லப்படுகிறது. இது போல ஏராளமான உதவிகள் அஜித் செய்து இருக்கிறார் என கூறியுள்ளார்.

Exit mobile version