ஐஸ்வர்யா செத்துட்டான்னு சந்தோஷத்தில் கௌதம்! ஐஸ்வர்யாவை கல்யாணம் செய்யும் ரவுடி.!! கௌதமை சந்தேகப்படும் மகா… பரபரப்பாக ஆஹா கல்யாணம்.

aaha kalyanam gutham
aaha kalyanam gutham

ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோடில் கௌதம் பிளான்  செய்தது போல் அவரை அடித்து போட்டுவிட்டு ஐஸ்வர்யாவை ரவுடிகள்  கடத்தி சென்று விடுகின்றனர். கௌதம் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி விடுகிறார். அந்த டாக்டர் நர்ஸ் என அனைவரும் கௌதமுக்கு துணை போகின்றனர். கௌதம் சீரியஸாக இருப்பது போல் அனைவருமே நடிக்கின்றனர்.

கௌதம் ஹாஸ்பிடலில்  நர்ஸ் கையை பிடித்து தடவி வழிந்து  கொண்டிருக்கிறார். இப்போது அவரைப் பார்ப்பதற்கு சித்ராதேவி, சூர்யா, மகா மற்றும் மகாவின் மாமனார் என அனைவரும் வருகின்றனர். அந்த சமயத்தில் டாக்டர் வந்து கௌதம் ரொம்ப சீரியஸ் ஆக இருப்பது போல்  கதை விடுகிறார்.

ஒருமுறை  நினைவு வந்தது அப்போது அவர் பெயர் கௌதம் என்றும்  உங்கள் போன் நம்பரும் கொடுத்தார் என கூறுகிறார். உடனே மகா ஐஸ்வர்யாவை பத்தி ஏதாவது சொன்னாரா என  கேட்கின்றார் அதற்கு ஐஸ்வர்யாவா அவங்கள பத்தி  ஒன்னும் சொல்லல என கூறுகிறார்.பேசிக் கொண்டிருக்கும்போதே நர்ஸ் வந்து கௌதமுக்கு நினைவு வந்து விட்டது என டாக்டரிடம் கூறுகிறார்.

சூர்யா விட்டு கொடுத்ததால் தான் இன்று விஜய் உச்சத்தில் இருக்கிறாரா.? புயலை கிளப்பிய பிரபலம்…

உடனே அனைவரும் கௌதமை பார்க்க செல்கின்றனர்.அப்போது கௌதம் ஐஸ்வர்யா ஐஸ்வர்யா எனக்கூறி நடிக்கிறார். சூர்யா  ஐஸ்வர்யாவுக்கு என்ன ஆச்சு என கேட்கிறார். அதற்கு கௌதம் என்ன ரவுடிங்க அடிச்சு போட்டுட்டு ஐஸ்வர்யாவை இழுத்துட்டு போய்ட்டானுங்க எனக் கூறுகிறார்.

உடனே மகா சந்தேகப்பட்டு  நீங்க ஏன் அங்க போனீங்க நீங்க வேற இடத்துக்குல போறேன்னு சொன்னீங்க எனக் கேட்கிறார். அதற்கு கௌதம் ஐஸ்வர்யா பிரக்னண்டா இருக்கிறதால லாங் டிரைவ் வேணாம்னு பக்கத்திலேயே போனோம் என கூறுகிறார். எந்த வழியா போனீங்க என்ன விசாரிக்கிறார் கௌதம் மழுப்புகிறார். அதை புரிந்து கொண்ட மகா மேலும் மேலும் கேள்வி எழுப்புகிறார். இதனால் சித்ராதேவி கௌதமிடம் மயங்கி விழ சொல்லி  கண் ஜாடை காட்டுகிறாள்  உடனே கௌதம் மயக்கம் வருவது போல் நடித்து விடுகிறார்.

இந்த நிலையில் ஐஸ்வர்யாவை தற்போது கடத்தி சென்றவன் ஏற்கனவே ஒரு முறை ஐஸ்வர்யாவை கடத்தி சென்றவன் அவன் ஐஸ்வர்யாவை காதலிக்கிறான். தற்போது ஐஸ்வர்யாவை கடத்தி சென்று கட்டி வைத்துவிட்டு கல்யாணம் செய்வதற்காக மாலை வாங்குவதற்காக கடைக்கு போயிருக்கிறான். அங்கு அவர் பேசுவதை கோடீஸ்வரி கேட்டுக் கொண்டிருக்கிறாள்.

விஜயின் துப்பாக்கி படத்தில் தங்கையாக நடித்த நடிகையா இது.? ஆளே அடையாளம் தெரியாமல் எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.

அப்போது கௌதம் அந்த ரவுடிக்கு போன் பண்ணி ஐஸ்வர்யாவை கொன்னுட்டியா எனக் கேட்கிறார் அதற்கு அவனும் கொன்னுட்டேன் அதுக்கு மரியாதை செலுத்த தான் மாலை வாங்கிட்டு போலான்னு வந்திருக்கேன் என பொய் சொல்லுகிறார்.

கௌதமும் ஐஸ்வர்யா இறந்ததாக நினைத்து சந்தோஷப்படுகிறார். கௌதம் ரௌடியிடம்  டெட் பாடியுடன் இருந்து வீடியோ கால் பண்ணு எனக் கூறுகிறார். அதற்கு அவரும் சரி என சொல்கிறார். நம்ம கல்யாணத்தை பண்ணிட்டு எல்லாம் உண்மையை சொல்லிக்கலாம் இப்ப சொன்னா இவன் கல்யாணத்தை நிறுத்திடுவான் என ரவுடி மனசுக்குள்ள நினைத்துக் கொள்கிறார். ஆனால் ரவுடி ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொள்வதிலேயே குறியாக இருக்கிறார். இது தெரியாமல்  கௌதம் ஐஸ்வர்யா இறந்துவிட்டார் என சந்தோஷத்தில் இருக்கிறார். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.