“ஜெய்பீம்” படத்தை பார்த்துவிட்டு நடிகர் சூரி போட்ட பதிவை பார்த்து நெகிழ்ந்து போன படக்குழு.! அப்படி என்ன தான் சொல்லி இருக்காரு..

jaibhim-and-surya

தீபாவளியை முன்னிட்டு பல்வேறு நடிகர்களின் படங்கள் வெளியாகி தற்போது ரசிகர்கள் கொண்டாட வைக்கின்றன அந்த வகையில் தீபாவளியை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த, விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் வெளியான எனிமி ஆகிய படங்கள் திரையரங்கிலும் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ஜெய்பீம் படமும் வெளியாகி மக்களை கவர்ந்து இழுத்து உள்ளன.

அதிலும் குறிப்பாக ஜெய்பீம் திரையரங்கில் வெளியாகாமல் மாறுதலாக OTT தளத்தில் வெளியாகி இருந்தாலும் படம் சிறப்பாக இருப்பதால் அந்த படத்திற்கு தற்போது மக்கள் அதிகம் கண்டுகளித்து வருவதோடு படம் சூப்பராக இருப்பதாக கமெண்டுகளை கொடுத்து வருகின்றனர் இந்த திரைப்படத்தை டிஜே ஞானவேல் இயக்கி உள்ளார் சூர்யா வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி உள்ளார்.

படத்தின் கதைக்கு ஏற்றவாறு ஜெய்பீம் என்ற தலைப்பு சிறப்பாக பொருந்தி உள்ளதாக பலரும் கூறி வாழ்ந்து வருகின்றனர். பழங்குடியினரான இருளர்கள் இனத்தைச் சார்ந்துதான் இந்த படமும் நகருகிறது உண்மையில் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது இந்த படம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து முடியும் வரை படம் விறுவிறுப்பாக செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படம் சூர்யா சினிமா கேரியரில் ஒரு பேஸ்ட் படமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய ஒரு வேட்டை நடத்தும் என குறிப்பிடத்தக்கது மேலும் இந்த திரைப்படத்தில் நடித்தபோது ஒருவரும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர் இந்த படத்தை ஆளுமையில் நடிகர் சூரி பார்த்துள்ளார். பின் அவர் சமூகவளைத் தளப்பக்கத்தில் ஜெய்பீம் படம் குறித்து பேசியுள்ளார்.

soori
soori

அவர் கூறியது: என்னவென்றால் இரவு தூங்குவதற்கு முன் ஜெய்பீம் படத்தை கொஞ்ச நேரம் பார்த்து விட்டு மீதியை நாளைக்கு பார்த்துக் கொள்ளலாம் என முடிவு செய்திருந்தாராம் ஆனால் படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை நேரம் போனது தெரியவில்லை மேலும் படம் முடிந்தும் என்னால் எழுந்திருக்க முடியவில்லை அப்படியே உறைந்து விட்டேன் ஜெய் பீம் படம் அல்ல பாடம் விருதுகள் கிடைத்தால் அது அந்த விருதுக்கு பெருமை என சூரி கூறினார். மேலும் நிச்சயம் மக்கள் மற்றும் ரசிகர்கள் பார்க்க வேண்டிய படம் தவிர்த்து விடாதீர்கள் என கேட்டுக்கொண்டுள்ளார்.