கோடி கோடியாக சம்பளம் வாங்கிய முன்னணி நடிகர்களுக்கு தயாரிப்பாளர் வச்ச ஆப்பு.! என்ன சோளமுத்தா போச்சா…

சீனாவில் தோன்றிய கொரோனவரஸ் தற்போது இந்தியாவில் மிக வேகமாக பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் 7 லட்சத்திற்கு மேல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தமிழகத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டிவிட்டது.

இதனால் இந்திய பொருளாதாரம் மிகவும் சரிந்துள்ளது, அதே போல் சினிமா துறையும் முடங்கிக் கிடக்கிறது, சினிமாத்துறை முடங்கியதால் பலகோடி இழப்பு ஏற்பட்டுள்ளது, அதனால் நடிகர் மற்றும் நடிகைகள் சம்பளத்தை அதிரடியாக குறைப்பதற்கு தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளார்கள்.

சமீபத்தில் தமிழக திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு இடையே ஆலோசனை கூட்டம் நடைபெற்றது அந்த ஆலோசனையில் ரஜினி, அஜித், விஜய், சூர்யா ஆகிய முன்னணி நடிகர்களின் சம்பளத்தை 50 சதவீதமாக குறைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது அந்த ஆலோசனைக் கூட்டத்தில். அதுமட்டுமல்லாமல் நடிகைகள் சம்பளத்திலும் தொழில்நுட்ப கலைஞர்கள், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், இயக்குனர் என அனைவரின் சம்பளத்தில் 50 சதவீதத்தை குறைக்க அதிரடியாக முடிவு எடுத்துள்ளார்.

ஒரே படத்திற்கு 30 கோடி 40 கோடி வாங்கும் முன்னணி நடிகர்களுக்கு தயாரிப்பாளர்கள் சரியான ஆப்பு வைத்துவிட்டார்கள். இதைப்பார்த்த நெட்டிசன்கள் என்ன சோளமுத்தா போச்சா என வடிவேல் மீம்ஸ் போட்டு தெறிக்க விட்டு வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version