16 வயதினிலே, கரகாட்டக்காரன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது நான் தான்.! பல வருடம் கழித்து உண்மையை கூறி வருத்தப்படும் நடிகை…

நடிகை நிரோஷா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக பல நடிகர்களுடன் நடித்து வந்தவர், தற்பொழுது இவர் சின்ன திரையில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார் ஏற்கனவே இவர் சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியலில் நடித்திருந்தார் இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இரண்டாவது சீசனில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

நடிகை நிரோஷா கமலஹாசன் கார்த்தி ஆகிய முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இப்படி பிஸியாக நடித்துக் கொண்டிருந்த நிரோஷா அந்த காலகட்டத்திலேயே ஒரு சில திரைப்படங்களில் நடிக்க முடியாமல் ஆகிவிட்டது அதற்கான காரணம் இது தான் என பல வருடம் கழித்து ரகசியம் உடைத்துள்ளார்.

டி ஆர் பி இல் மீண்டும் பின்னுக்கு தள்ளப்பட்ட முக்கிய சீரியல்.! முந்தி கொண்டுவரும் சிறகடிக்க ஆசை.! இதோ டிஆர்பி முழு லிஸ்ட்..

புகழின் உச்சத்தில் இருந்த பொழுது நடிகை நிரோஷா திருமணம் செய்து கொண்டார் திருமணம் செய்து கொண்டு சில வருடங்களிலேயே சினிமாவை விட்டு விலகி இருந்தார் தற்பொழுது மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளார். நிரோஷா வேற யாரும் கிடையாது சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ராதிகாவின் தங்கைதான்.

இவர் வெள்ளித்திரையில் நடித்த பல திரைப்படங்களை பார்த்துள்ளோம் இந்த நிலையில் சின்னத்திரையில் பாண்டியன் ஸ்டோர் 2 சீரியலில் கோமதி என்ற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் மேலும் நடிகை நிரோஷா ரஜினி நடிப்பில் வெளியாகிய லால் சலாம் திரைப்படத்திலும் ரஜினியின் மனைவியாக நிரோஷா நடித்துள்ளார்.

அடப்பாவிகளா எதிர்நீச்சலுக்கு இந்த நிலைமை.! அதிரடி மாற்றத்திற்கு காரணம் இந்த இரண்டு சீரியல் தானா.?

அது குறித்த சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அதாவது வெள்ளி திரையில் முன்னணி நடிகையாக நடிக்கும் போது ரஜினிகாந்த் அவர்களுடன் ஜோடியாக நடிக்க வாய்ப்பே கிடைக்கவில்லை அதை நினைத்து பலமுறை வருத்தப்பட்டு உள்ளேன் ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் அது நிறைவேறியுள்ளது என சந்தோஷத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

அதேபோல் கரகாட்டக்காரன் மற்றும் 16 வயதினிலே திரைப்படத்தில் நான்தான் முதலில் நடிக்க வேண்டியது முதன் முதலில் அந்த இரண்டு திரைப்படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது ஆனால் அந்த நேரத்தில் வேறொரு ஷூட்டிங்கில் மிகவும் பிசியாக இருந்ததால் அந்த திரைப்படங்களில் நடிக்க முடியாமல் போனது.

அரசியலில் இறங்குவதற்கு முன்பே விஜய்க்கு வந்த குடைச்சல்.! மண்டபத்தை ஸ்கெட்ச் போட்டு பக்காவாக மாற்றிக்கொண்ட தளபதி.!

அதிலும் கரகாட்டக்காரன் திரைப்படத்தில் ஒரே ஒரு நாள் ஷூட்டிங் வந்து நடித்துக் கொடு என கங்கை அமரன் சார் என்னிடம் கேட்டார் ஆனால் அந்த நேரத்தில் இணைந்த கைகள் திரைப்படத்தில் மிகவும் பிசியாக நடித்ததால் அந்த திரைப்படத்திலும் நடிக்க முடியாமல் போனது என வருத்தப்பட்டுள்ளார் அது மட்டும் இல்லாமல் இரண்டு திரைப்படங்களிலும் நடித்திருந்தால் என்னுடைய மார்க்கெட் வேற லெவலில் இருந்து இருக்கும் ஆனால் என்னால் அந்த திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது என வருத்தப்பட்டு பேசி உள்ளார் நிரோஷா.