புதிய பிசினஸை தொடங்க போகும் நடிகர் சூர்யா..! இனிய காசுக்கு பஞ்சமே கிடையாது.?

surya
surya

நடிகர் சூர்யா தமிழ் சினிமா உலகில் வெற்றி நாயகனாக ஓடிக்கொண்டிருக்கிறார் இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் படங்கள் தான் தற்போது கூட சிறந்த இயக்குனர்களுடன் கைகோர்த்து தனது அடுத்தடுத்த புதிய படங்களில் நடித்து வருகிறார்.

முதலாவதாக இயக்குனர் பாலா உடன் மீண்டும் ஒருமுறை கைகோர்த்து வணங்கான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் உடன் வாடிவாசல், சிறுத்தை சிவா உடன் ஒரு படம் சுதா கொங்கரா உடன் ஒரு படம் பணம் உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் சூர்யாவின் சினிமா பயணம் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. நடிகர் சூர்யா ஒரு பக்கம் படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும்.. மறுபக்கம் சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட்  நிறுவனம் பல்வேறு சிறந்த படங்களை தயாரித்து வெற்றி கண்டு வருகிறது ஏன் இப்பொழுது கூட சூரறை போற்று படத்தின் ரீமேக் ஹிந்தியில் உருவாகி வருகிறது.

அந்த படத்தை சூர்யாவின் 2d என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது இப்படி கிடைக்கின்ற நிலையில் எல்லாம் வழியிலும் காசு பார்த்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் சூர்யா மற்றொரு பிசினஸ்  செய்ய உள்ளார் அதாவது தமிழகத்தில் மொத்தம் ஐந்து திரையரங்குகளை கைப்பற்ற உள்ளார்.

இதன் மூலம் நல்ல காசு வருவதோடு மட்டுமல்லாமல் தனது படங்களை அதிக நாள் ஓட வைக்கவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொழில் சூர்யாவுக்கு நல்ல காசு கொடுக்கக் கூடிய ஒரு விஷயம் என இதை அறிந்த பலரும் கூறி வருகின்றனர் அதேசமயம் இப்படி நடிகர்களே எல்லா தொழிலையும்  எடுத்துவிட்டால் அப்ப மற்றவர்கள் என்ன செய்வார்கள் என்றும் கேட்டு வருகின்றனர்.