மூக்கு பொடப்பா இருந்தா இப்படி தான் பேச தோணும்.. பொடனில அடிவாங்கி வெளியேறிய அர்ணவ் வாங்கிய சம்பளம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று அர்ணவ் எலிமினேட் செய்யப்பட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஆனால் அவர் எப்படி வெளியேறினார் என்பதுதான் சுவாரஸ்ய சம்பவமாக மாறிவிட்டது.

கடும் கோபத்தோடு வீட்டை விட்டு வெளியில் வந்த அவர் மேடைக்கு வந்ததுமே பெண்கள் அணியை தலையில் தூக்கி வைத்து பேச ஆரம்பித்து விட்டார். அதை அடுத்து பாய்ஸ் டீம் மீது தனக்கு இருந்த வன்மம் மொத்தத்தையும் கொட்டி தீர்த்தார்.

இதுதான் அவருடைய உண்மை முகமோ என நாம் நினைக்கும் அளவுக்கு இருந்தது அவருடைய பேச்சு. அதை பாதியிலேயே கட் செய்த விஜய் சேதுபதி இப்படி எல்லாம் இங்கே பேசக்கூடாது என அவருக்கு அட்வைஸ் செய்து துரத்தி விட்டார்.

ஆனால் அவருடைய உண்மையான குணம் வெளிப்பட்டதில் பார்வையாளர்கள் தற்போது அவர் மீது இருக்கும் வெறுப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். சோசியல் மீடியாவில் இப்போது அவர் விஜய் சேதுபதியிடம் வாங்கி கட்டிய காட்சிகள் தான் வைரலாகி வருகிறது.

இதை பார்த்த பிறகாவது தான் செய்தது தவறு என அவர் புரிந்து கொண்டால் சரிதான். இப்போது அவர் வாங்கிய சம்பளம் பற்றிய விஷயத்திற்கு வருவோம். அதாவது பிக் பாஸ் வீட்டில் ஒரு நாளைக்கு அவருடைய சம்பளம் 25 ஆயிரம் ஆகும்.

இதுவரை அவர் 14 நாட்கள் வீட்டுக்குள் இருந்துள்ளார். அதை வைத்து பார்த்தால் அவருடைய சம்பளம் 3.5 லட்சம் ஆக இருக்கிறது. கெட்ட பெயரை சம்பாதித்தாலும் கை நிறைய காசோடு தான் அவர் வெளியேறி இருக்கிறார்.

அவர் நடித்து வந்த செல்லமா சீரியலும் முடிந்த நிலையில் விஜய் டிவி மீண்டும் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்குமா என்பது தெரியவில்லை. ஆனால் மக்கள் மனதில் அவர் எதிர்பார்த்த இடம் தான் கிடைக்கவில்லை.