கௌதமை மடக்க பாலில் வசிய மருந்து கலந்த ஐஸ்வர்யா.. ரொமான்ஸ் பண்றது யார் தெரியுமா.? ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

Aaha Kalyanam today episode 19
Aaha Kalyanam today episode 19

Aaha kalyanam today episode October 19 : இன்றைய எபிசோடில் ஐஸ்வர்யா நம்ப கர்ப்பமா இல்லை என்கிற விஷயம் கெளதமுக்கு தெரிஞ்சா நம்மளை வீட்டை விட்டு அனுப்பிடுவார் அதனால எப்படியாவது சீக்கிரம் நான் பிரக்னன்ட் ஆயிடனும் அதுக்கு ஏதாவது வழி பண்ணனும் என்று பாலில் வசிய மருந்து கலந்து கௌதமுக்கு கொடுத்து நம்ம நினைச்சதை சாதித்து விடலாம் என்று பால் காய்ச்சிக் கொண்டிருக்கிறார்.

இன்னொரு பக்கம் மகா சூர்யா ரொம்ப டயர்டா இருக்காரு அவருக்கு பால் காய்ச்சி கொடுக்கலாம் என்று கிச்சனுக்கு வந்து பால் காச்சி வேலைக்காரியிடம் நான் இங்க பால் காய்ச்சி வைக்கிறேன் நீங்க அம்மா குடுக்க சொன்னதா சூர்யா கிட்ட இத கொடுத்துடுங்க என்று சொல்கிறார்.

அண்ணாமலையை தூக்கிய போலீஸ்.. ஹனிமூன் போன ரவி – ஸ்ருதி.! சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

ஐஸ்வர்யாவும் கௌதமுக்கு காய்ச்சிய பாலில் வசிய மருந்து கலந்து அந்த இடத்தில் வைத்துவிட்டு ஃபோன் பேசிக் கொண்டிருக்கிறார் பிறகு ஐஸ்வர்யா மகா காச்சி வச்ச அந்தப் பாலை எடுத்துக்கொண்டு போய் கௌதம் இடம் குடுத்து குடிக்க சொல்ல கௌதமும் பாலை குடித்து விட்டார் உடனே ஐஸ்வர்யா சந்தோஷத்தில் மேக்கப் போட்டுக்கொண்டு கௌதம் இப்ப நம்மளை வந்து கட்டிப்பிடிப்பார் என ஆசையாக எதிர்பார்த்து இருக்கிறார்.

ஆனால் கௌதம் பாலை குடித்துவிட்டு தூங்கிவிட்டார்.. இன்னொரு பக்கம் வசிய மருந்து கலந்த அந்த பாலை சூர்யா குடித்துவிட்டு ரூமுக்கு போய் மகாவிடம் ரொமான்ஸ் பண்ணுகிறார்.. மகா நீங்க  ஒரு மாதிரி இருக்கீங்க கிட்ட வராதீங்க என்று சொல்லியும் கேட்காமல் சூர்யா மகாவிடம் கொஞ்சி கொண்டிருக்கிறார்.

லியோ படத்தின் PS வசூல் இத்தனை கோடியா.? விஜய் கேரியரில் இதுவே முதல் முறை..! அதிர்ச்சியில் தமிழ் சினிமா

மகா சூர்யாவுக்கு என்ன ஆச்சு மூடவுட்டா இருந்தாரு இப்ப திடீர்னு வேற மாதிரி இருக்காரு குடிச்சிருக்காரா என பார்க்கிறார் ஆனால் சூர்யாவிடம் எந்த ஒரு ஸ்மெல்லும் வரவில்லாததால் என்னவாக இருக்கும் என குழம்பிப் போயிருக்கிறார்.. இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது..