கௌதம் வரவில்லை.. அர்த்தராத்திரியில் குடும்பத்தினரை டார்ச்சர் பண்ணிய ஐஸ்வர்யா – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோடு

Aaha kalyanam Today episode October 10 : இன்றைய எபிசோடில் பிரபா ஐஸ்வர்யாவை பார்க்க வீட்டிற்கு வந்திருக்கிறார் அப்பொழுது சித்ராதேவி வாய்க்கு வந்தபடி பிரபாவை திட்ட உடனே ஐஸ்வர்யாவும் நீ என் அத்தை கிட்ட ஏதாவது சீப்பா பிகேவ் பண்ணி இருப்ப அதனாலதான் உன்ன திட்டி இருப்பாங்க ஒழுங்கா மன்னிப்பு கேளு என்கிறார். பிறகு பிரபாவை ஏன் இங்கு வந்த என்று கேட்க ஐஸ்வர்யாவுக்காக அப்பா மாங்கா ஊறுகாயும், மாங்காவும் கொடுத்து அனுப்பினார்.

அதனால்தான் என்று சொல்ல ஐஸ்வர்யா எனக்கு மாங்கா பிடிக்காதே நான் சாப்பிட மாட்டேன் என்கிறார் எல்லோரும் மாசமாய் இருக்கிறவங்களுக்கு மாங்கா சாப்பிட்டா வாமிட் வராது அதனால எல்லோரும் சாப்பிட ஆசைப்படுவாங்க நீ பிடிக்காதுன்னு சொல்றியே என்று கேட்க பிறகு ஆமா, எனக்கும் வாமிட் வந்துட்டே தான் இருக்கு என்று அந்த மாங்காய் ஊறுகாய சாப்பிட்டு விட்டு நல்லா இருக்கு என்கிறார்.

அடுத்து பிரபா கிளம்பியதும் விஜய் சித்ராதேவி பெரியம்மா பேசினது தப்பா எடுத்துக்காத அவங்க அப்படித்தான் என்று சொல்லிவிட்டு நான் ட்ராப் பண்றேன் வா என்று கூப்பிட்டு போகிறார்.. அடுத்து சூர்யா மகாவிற்காக பெட் வாங்கிட்டு வருகிறார் இது ஏன் என்று கேட்க நான் ஒரு நாள் கீழே படுத்து பார்த்த அப்ப எனக்கு அவ்வளவு பேக் பெயின் வந்தது அதனால நீயும் டெய்லி கீழ படுத்து கஷ்டப்படுற இல்ல.

என்னால யாரும் கஷ்டப்படக்கூடாது அதனால்தான் என்று சொல்கிறார்.. உடனே மகா சந்தோஷமாக பெட்டில் தேங்க்யூ என்று பூவால் எழுதி வைக்கிறார்.. இதை பார்த்துவிட்டு சூர்யா தேங்க்யூ எல்லாம் ஒன்னும் எனக்கு தேவை இல்லை என்று சொல்கிறார் பிறகு நீங்க எனக்கு பெட் வாங்கினதை லவ் என்று நினைச்சுகிட்டா என மகா கேட்கிறார்.

பிறகு கௌதம் சித்ராதேவி இடம் ரூமுக்கு வந்தா ஐஸ்வர்யா பேசி பேசி டார்ச்சர் பண்றா என்று சொல்ல சித்ராதேவி நீ வீட்டுக்கு அதிகமா வராத வேலை இருக்குன்னு பொய் சொல்லிட்டு எங்கேயாவது போயிடு கம்பெனில நிறைய ஒர்க் சூர்யா செய்ய சொல்றாரு என்று பழியை சூர்யா மேல போடு என சொல்கிறார்.

அடுத்து ஐஸ்வர்யா நைட்டு கௌதம்க்காக ஆசையாக ரூமில் மேக்கப் போட்டுக்கொண்டு காத்துக் கொண்டிருக்கிறார் ஆனால் கௌதம் வரவில்லை, போன் பண்ணி பார்த்தால் ஃபோனும் சுவிட்ச் ஆப்பில் இருக்கிறது அதனால் ஐஸ்வர்யா ரூமை விட்டு வெளியே வந்து காலிங் பெல் அடித்து தூங்கி கிட்டு இருக்கும் எல்லோரையும் எழுப்பி விடுகிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.

Exit mobile version