தம்மாதுண்டு டிரெஸ்ஸை போட்ட ஐஸ்வர்யா.. பிளான் ஒர்க் அவுட் ஆகுது என நினைக்கும் கௌதம் – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

Aaha Kalyanam today episode November 22
Aaha Kalyanam today episode November 22

Aaha kalyanam today episode november 22 : இன்றைய எபிசோடில் மகா சூர்யாவுடைய ஆபீஸ் இருக்கு வந்து நான் தான் ஸ்ரேயா என்று அந்த கிளைன்டிடம் பேசி ஆர்டரை ஓகே செய்துள்ளார். பிறகு சூர்யா மகாவை எதுக்கு இந்த பொய்ப்பித்தலாட்டம் பண்ண, ஸ்ரேயா என்று சொல்லி ஏன் நாடகமாடுன என்று கேட்பதற்கு அதுக்கு காரணம் நீங்க தான்..

நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ணலாம்னு தான் ஆபீஸ்க்கு வந்து உங்ககிட்ட நான் வரைஞ்ச டிசைனை காமிச்சேன் ஆனா நீங்க உனக்கு எல்லாம் கோலம் போடத் தான் தெரியும் டிசைன்ன பத்தி உனக்கு என்ன தெரியும் என்று அதை பார்க்காமலே கசக்கி போட்டுட்டீங்க திரும்ப அதையே பவித்ரா பிரிண்ட் அவுட் எடுத்துட்டு வந்து காமிச்சப்ப சூப்பரா இருக்குன்னு சொன்னீங்க..

பிக் பாஸ் வீட்டில் அடுத்த பூகம்பம்.! டாஸ்க் 2.. ஜெயித்தார்களா ஹவுஸ் மேட்ஸ்கள்?

அப்போ எனக்கு எப்படி இருந்திருக்கும் அதனாலதான் நான் இந்த மாதிரி பண்ணுனேன் நீங்க தான் என்னோட திறமையை மதிக்கவே இல்லை என்று சொல்ல பிறகு சூர்யா யோசித்துப் பார்த்துவிட்டு 50,000 பணத்தை எடுத்து மகா கையில் கொடுத்து இது ஸ்ரேயாவ நீ செஞ்ச வேலைக்கான பணம்.. இந்த பணத்தை நீ என்ன வேணாலும் பண்ணிக்கலாம் இனிமே நைட்ல நீ யாருக்கும் தெரியாம ஒளிஞ்சி டிசைன் பண்ணனும்னு அவசியம் இல்ல..

ரூம்ல உட்கார்ந்து பண்ணலாம் என்று சொல்கிறார் இதைக் கேட்டு மகா ரொம்ப சந்தோஷப்படுகிறார்.. அடுத்த நாள் சூர்யா ஆஃபீஸ்க்கு போகும் போது மகா எங்க அம்மா வீட்டுக்கு நான் போயிட்டு வரட்டுமா என்று கேட்கிறார்.. அதற்கு ராஜலட்சுமி உன் கையில தான் போன் குடுத்திருக்கேன்ல அதை வச்சு நீ பேசிக்கோ நேர்ல போக கூடாது என்று சொல்கிறார்.

ரோகினிக்கு போன் பண்ணி 50,000 கேட்ட வசீகரன்.. சந்தோஷத்தில் மீனாவை தூக்கிய முத்து – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

பிறகு பானுமதி பாட்டி ராஜலட்சுமியை பார்த்து நீயே உங்க வீட்டுக்கு போகன்ணுன்னா இன்னமும் சந்தோஷமா தான் போவ அப்படி இருக்கும்போது மகா அவங்க வீட்டுக்கு போனா என்ன தப்பு என்று சொல்லிவிட்டு மகாவிடம் உங்க அத்தையோட அத்தை நான் சொல்றேன் நீ உங்க வீட்டுக்கு போயிட்டு வா என சொல்கிறார்.

பிறகு சூர்யா என்ன ட்ராப் பண்னுங்கன்னு கேட்டா என்ன குறைஞ்சா போய்விடுவ என்று மகாவிடம் கேட்க மகா உங்ககிட்ட கேட்ட ஆபீஸ்ல வேலை இருக்குன்னு என்கிட்ட கத்துவீங்க உங்களுக்கு விருப்பம் இருந்தா அழைச்சிட்டு போங்க என்று சொல்ல பிறகு சூர்யா சரி வா நான் டிராப் பண்றேன் என்று ரெண்டு பேரும் காரில் போய்க் கொண்டிருக்கின்றனர்.

அப்பொழுது என்னோட பிறந்த வீட்டுக்கு நீங்களே என்ன அழைச்சிட்டு போறது ரொம்ப சந்தோஷமா இருக்கு என்று மகா சொல்கிறார்.. அடுத்து ஐஸ்வர்யா குட்டியோண்டு ட்ரெஸ்ஸை போட்டுக்கொண்டு கௌதம் இது எப்படி இருக்கு என்று கேட்க என்ன ஐஸ்வர்யா எப்படி டிரஸ் பண்ணி இருக்க இத வீட்ல யாராவது பார்த்தா என்ன சொல்லுவாங்க என்று சொல்லிவிட்டு பிறகு நல்லா இருக்கு என சொல்கிறார்.

அதற்கு ஐஸ்வர்யா உங்களுக்கு புடிச்சிருக்குல சரிதான் ஷூட்டிங்க்கு இந்த மாதிரி டிரஸ்ல போனா தான் அதுக்கு ஏத்த ஷார்ட் வைப்பாங்க என சொல்கிறார் அதற்கு கௌதம் நீ இந்த ட்ரெஸ்ஸோட கீழே போ இதை எல்லாரும் பார்த்தாங்கன்னா போதும் அவங்களே உன்னை வீட்டை விட்டு அனுப்பி விடுவாங்க என்று நினைக்கிறார் இதோடு இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.