மாடலிங் துறையில் கால் எடுத்து வைத்த ஐஸ்வர்யா.. வீட்டில் வெடிக்க போகும் அணுகுண்டு – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

Aaha Kalyanam today episode November 09
Aaha Kalyanam today episode November 09

Aaha kalyanam today episode november 09 : இன்றைய எபிசோடில் ஐஸ்வர்யாவிற்கு ஒரு போன் கால் வந்தது அதை கேட்டு சந்தோஷத்தில் துள்ளி குதிகிறார். பிறகு ஐஸ்வர்யா கௌதமிடம் எனக்கு மாடலிங் பண்ண வாய்ப்பு கிடைச்சிருக்கு இப்பதான் போன் பண்ணி சொன்னாங்க ரொம்ப சந்தோஷமா இருக்கேன். இந்த வாய்ப்பு உங்களால தான் கிடைச்சது.

எனக்கு எல்லார்கிட்டயும் கத்தி சொல்லணும்னு இருக்கு ஆனா நீங்க யார்கிட்டயும் சொல்ல கூடாதுன்னு சொன்னீங்க அதனால தான் உங்க கிட்ட மட்டும் சொல்றேன்.. நான் மட்டும் செலிபிரிட்டி ஆயிட்டா என்னோட பர்சனல் மேனேஜர் நீங்க தான் என்னோட பணத்தை எல்லாம் நீங்க தான் வச்சிருப்பீங்க நான் உங்களை பார்த்துக்கிறேன் நீங்க எதுக்கும் கவலைப் படாதீங்க என்று சொல்கிறார்.

நடு ரோட்டில் முத்து, மீனாவை இறக்கி விட்டு காரை தூக்கிய பைனான்சியர் – பரபரப்பான கட்டத்தில் சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

அடுத்து மகா, சூர்யா இன்னும் தூங்கலையே தூங்கினதுக்கு நம்ம வேலை செய்யணும் என்று ஏதேதோ சொல்லி சூர்யாவை தூங்க வைத்துவிட்டு பிறகு நோட்டு எடுத்துக் கொண்டு வெளியில் தனியாக உட்கார்ந்து மகா நகை டிசைன் வரைந்து கொண்டிருக்கிறார்.. அப்பொழுது சூர்யா வந்து மகா கிட்ட என்ன பண்ணிட்டு இருக்க என்று கேட்க..

அதுவா கோலம் போட்டு பார்த்துட்டு இருக்கேங்க, எனக்கு பெரிய கோலமே வர மாட்டேங்குது அதனால் தான் என்று சொல்ல சூர்யா இந்த நேரத்துலயா கோலம் போட்டு பார்த்துகிட்டு இருப்ப, நான் எத்தனை தடவை உன்கிட்ட சொல்லி இருக்கேன் உனக்கெல்லாம் கோலம் போட தான் வரும்னு அதை நிரூபிச்சிட்ட பாத்தியா என்று சொல்லிவிட்டு சூர்யா சென்று விட்டார்.

நீதி வென்றதா? சூழ்ச்சி விழ்ந்ததா? காரசாரமாக நடைபெற்ற கோர்ட் டாஸ்க்

பிறகு மகா டிசைன் வரைந்து அதை பவித்ராவிற்கு அனுப்பி வைத்துள்ளார் பவித்ராவும் நல்லா இருக்கு என்று சொல்ல.. மகா எப்படியும் நமக்கு பணம் கிடைச்சிடும் அம்மாவுக்கு உதவி பண்ணலாம் என்று நினைக்கிறேன்.. அடுத்து கோடீஸ்வரி வீட்டில் கரண்ட் இல்லை அதனால் தசாதரன் இனிமே நம்ம வீட்டுக்கு கரண்ட் வராது, இபி பில் கட்டாததால் பியூசை புடிங்கிட்டாங்க என்று சொல்ல..

கோடீஸ்வரி இபி பில் கட்ட கூட நமக்கு வக்கில்லையா.. நான் மஹா கிட்ட நம்ம நிலைமையை எடுத்து சொல்லட்டா என்று கேட்க ஏற்கனவே அவங்க வீட்டுல நம்மள மதிக்க மாட்டாங்க இப்ப பணம் கேட்டா நமக்கு இருக்கிற கொஞ்ச நஞ்ச மரியாதையும் போய்விடும் அதெல்லாம் அவங்க கிட்ட கேட்க வேண்டாம் என்று தசாதரம் சொல்கிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.