தம்மாதுண்டு டிரஸ் ஆர்டர் போட்ட ஐஸ்வர்யா.. கோடீஸ்வரி வாங்கிய கடனை அடைக்க மகா பார்க்கும் வேலை – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

aaha kalyana
aaha kalyana

Aaha kalyanam today episode november 08 : இன்றைய எபிசோடில் விஜய் பக்கத்துல இருக்குற ஒரு மார்க்கெட்டில் குறைந்த விலைக்கு நல்ல காய்கறியா கிடைச்சது அதான் வாங்கிட்டு வந்தேன் என பிரபா வீட்டிற்கு வருகிறார் அதை பார்த்த பிரபா எங்களுக்கு என்ன பிச்ச போடுறியா, நாங்க உன்கிட்ட கேட்டோமா இதெல்லாம் எடுத்துட்டு போயிடு என்று சொல்ல விஜய் வருத்தமாக திரும்பி போகிறார்..

அடுத்து சூர்யா வீட்டில் வேலை செய்யும் மீனாட்சி அக்கா பொண்ணோட ஸ்கூல் பீஸ்க்காக சூர்யாவிடம் பணம் கேட்க சூர்யா மகா கிட்ட சொல்லி கப்போர்ட்ல பணம் இருக்கு இல்ல, அதுல 25 ஆயிரம் எடுத்துட்டு வந்து மீனாட்சி அக்கா கிட்ட குடு என்று சொல்கிறார்..  மகாவும் எடுத்துட்டு வந்து அந்த பணத்தை கொடுத்து விட்டார்.. அப்பொழுது மகா அம்மா வீட்டு பத்திரத்தை அடமானம் வச்சிருக்காங்களே அவங்களுக்கு உதவி பண்ண சூர்யா கிட்ட பணம் கேட்கலாமா என்று நினைக்கிறார் ஆனால் பணம் கேட்டால் பிறகு சொல்லிக் காண்பித்தால் என்ன பண்றது என்று நினைத்து சூர்யாவிடம் பணம் கேட்கவில்லை..

சோசியல் மீடியாவை அலறவிடும் பிரதீப் விவகாரம்.! ஆண்டவரின் அதிரடி முடிவு..

பிறகு மகா சோகமாக நிற்பதை பார்த்து விஜய் என்ன அண்ணி என்று கேட்க நான் எல்லாம் வேஸ்ட் கல்யாணத்துக்கு அப்புறம் எங்க அப்பா அம்மாவுக்கு உதவி செய்யணும்னு நினைச்சா கூட என்னால முடியல ஆனா பசங்க எப்ப நெனச்சாலும் உங்க அப்பா அம்மாவுக்கு உதவி பண்ணலாம் என வருத்தமாக பேசுகிறார்..  பிறகு ஐஸ்வர்யா ஆன்லைனில் இரண்டு சின்ன டிரஸ் ஆர்டர் பண்ணி இருக்கிறார்.

அதைப் பார்த்த கௌதம் இந்த டிரஸ்ஸ நீ போடுறத பார்த்தா இந்த வீட்டில் இருந்து உன்னை தொரத்திடுவாங்க என்று சந்தோஷப்படுகிறார்.. அடுத்து பவித்ரா மகாவுக்கு போன் பண்ணி நீங்க அன்னைக்கு டிசைன் பண்ணி கொடுத்ததுக்கு அப்புறம் என்னோட டிசைன் சாருக்கு பிடிக்கவே மாட்டேங்குது திரும்பவும் அந்த மாதிரி பண்ணி குடுங்க என்று கேட்க மகா நான் அந்த மாதிரி டிசைன் பண்ணி தரேன் அப்படின்னா நீ எனக்கு சேலரி தரணும் என்று கேட்க பவித்ரா நீங்க தான் ஓனர் எனக்கு செலரி தரீங்க,

புருஷனுக்கு ஆசை ஆசையாக மீன் குழம்பு வைத்த மீனா. மீண்டும் தில்லாலங்கடி வேலை பார்த்த விஜயா.. சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்..

நீங்க என்கிட்ட கேக்குறீங்களே என்று கேட்க எனக்கு எங்க அப்பா அம்மாவுக்கு உதவி பண்ண கொஞ்சம் பணம் வேணும் ஆனா அவர்கிட்ட கேட்க ஒரு மாதிரி இருக்கு அதனாலதான் உங்க கிட்ட கேட்கிறேன் என்று சொல்ல பவித்ராவும் சரி, நான் அதற்கு ஏற்பாடு பண்றேன் என்று சொல்கிறார்… அடுத்து ஐஸ்வர்யாவிற்கு ஒரு போன் கால் வருகிறது அதைக் கேட்டு ரொம்ப சந்தோஷத்தில் குதிக்கிறார் பிறகு கௌதம் என்னவென்று கேட்க சந்தோஷமான விஷயம் தான் என துள்ளி குதிக்கிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது..