ஐஸ்வர்யாவை நெருங்கிய சூர்யா, மகா.? கௌதமுக்கு காத்திருக்கும் ஆப்பு – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

Aaha kalyanam September 26 : இன்றைய எபிசோடில்  ஐஸ்வர்யாவிற்கு கல்யாணம் நடைபெற இருந்தது. ஆனால் கௌதம் கைலாஷ் என்பவரை வைத்து ஐஸ்வர்யாவை கடத்தியுள்ளார்.. மணப்பெண்ணை காணவில்லை என்பதால் கௌதம் மட்டும் மணமேடையில் உட்கார்ந்து இருக்கிறார்.. சூர்யா மகா இருவரும் ஐஸ்வர்யாவை தேடி காரில் அலைகின்றனர்.

பிறகு கைலாஷ் ஐஸ்வர்யாவை ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று காரை நிறுத்தி தண்ணீர் தெளித்து எழுப்புகிறார்.. உடனே ஐஸ்வர்யா ஏண்டா என்ன கடத்திட்டு வந்து என் வாழ்க்கையை வீணாக்குன என்று கேட்க இன்னும் கொஞ்ச நேரத்துல நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடக்க  போகுது என கைலாஷ் ஐஸ்வர்யாவிடம் சொல்ல ஃபர்ஸ்ட் பொறுமையாக இருப்போம்.

அப்புறம் எப்படி தப்பிக்கிறது என்று பார்க்கலாம் என ஐஸ்வர்யா அமைதி காக்கிறார்.. அடுத்து ராஜலட்சுமி சூர்யாவிற்கு போன் பண்ணி ஐஸ்வர்யா கிடைச்சாளா அவள எப்படியாவது கண்டுபிடிச்சிடு இல்லன்னா நம்ம குடும்பம் மானமே போயிடும் என்று சொல்கிறார் இதைக்கேட்ட மகா அப்ப எங்க அக்கா முக்கியம் இல்ல உங்க குடும்ப கவர்வம் தான் முக்கியமா என கோபப்படுகிறார்.

அடுத்து சித்ராதேவி அதான் ஐஸ்வர்யாவை காணுமே எழுந்திருடா கௌதம் என்று கௌதமை மனமேடையில் இருந்து எழுந்திருக்க சொல்கிறார்.. மேலும் சூர்யா கல்யாணத்துல இப்படி தான் அவன விட பெட்டரான ஆளா கௌதம் வேண்டும் என கல்யாணத்தை விட்டு ஓடினா, இப்ப கெளதம விட பெட்றா யாராவது கிடைச்சிருப்பாங்க அதான் ஐஸ்வர்யா ஓடி இருப்பா என்று கேவலமாக பேசுகிறார்.

மேலும் என் பையன் மேல எந்த தப்பும் இல்ல, நீங்கதான் இந்த கல்யாணம் ஏற்பாடு பண்ணுனீங்க இப்ப ஐஸ்வர்யா தான் ஓடிட்டா இல்ல அதனால உங்க பிரண்டு அருந்ததிக்கு போன் பண்ணி நடந்ததெல்லாம் சொல்லி வெண்ணிலாவ கௌதமுக்கு கல்யாணம் பண்ணி வைங்க என ராஜலட்சுமி இடம் சித்ராதேவி சொல்கிறார்.

அதற்கு ராஜலட்சுமி அப்படியெல்லாம் பண்ண முடியாது என்று சொல்லிவிட்டார். இன்னொரு பக்கம் கைலாஷ் ஐஸ்வர்யாவை கல்யாணம் பண்ணிக்க புரோகிதர்  என்ன இன்னும் வரலை என அவரது ஆள்களிடம் கேட்க பிறகு புரோகிதருக்கு போன் பண்ணி பார்த்தால் அவர் வர வழியில் என் வண்டி ரிப்பேர் ஆயிடுச்சு சரி பண்ணிட்டு வரேன் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என்று புரோகிதர் சொல்கிறார்.

அந்த புரோகிதர் வண்டி ஸ்டார்ட் ஆகாததால் லிப்ட் கேட்டு அந்த இடத்திற்கு போயிடலாம் என சூர்யா மகா வந்து கொண்டிருக்கும் காரை  வழிமறிக்கிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது நாளை இந்த புரோகிதரை வைத்து எப்படியும் சூர்யாவும் மகாவும் ஐஸ்வர்யாவை கண்டுபிடித்து விடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது..