கைலாஷ் -க்கு டோஸ் விட்ட ஐஸ்வர்யா.. கௌதம் திட்டம் நினைத்தபடி நடக்குமா.? பரபரப்பான கட்டத்தில் ஆஹா கல்யாணம்

Aaha kalyanam september 21

Aaha Kalyanam september 21 : இன்றைய எபிசோடில் கோடீஸ்வரி ஐஸ்வர்யாவை அழைத்துக் கொண்டு கௌதம் வீட்டிற்கு வருகின்றனர்.. அங்கு மீடியாக்காரர்கள் ஐஸ்வர்யாவிடம் பெரிய இடத்துக்கு கல்யாணம் பண்ணிட்டு வர போறீங்க எப்படி நினைக்கிறீங்க என்று கேட்கின்றனர்.

அதற்கு உடனே மகா அங்கு வந்து அக்கா இன்டர்வியூ கொடுக்காத, உன் வாயால இருந்தே நீ கர்ப்பமாய் இருக்கிற செய்தியை கேட்டுப்பாங்க பேசாம வா என்று அழைச்சிட்டு போகிறார்.. அங்கு ராஜலட்சுமி சித்ராதேவியை ஆரத்தி எடுக்க சொல்லுகின்றனர். அதற்கு சித்ரா தேவி திடீர்னு சொன்னா எப்படி எடுக்க முடியும் நான் ரெடி பண்ணலையே என்று சொல்ல கைலாஷ் ஆரத்தி எடுத்துட்டு வந்து சித்ராதேவி இடம் கொடுத்து ஆரத்தி எடுக்க சொல்கின்றனர்.

பிறகு ஐஸ்வர்யா உள்ள வந்ததும் மகா ஒரு ரூமுக்கு அழைத்திட்டு போய் இங்கே இருங்க கார்ல இருக்குற திங்ஸ் எல்லாம் பக்கத்து ரூம்ல இருந்து வச்சுருவோம் என்று சொல்கின்றனர்.. பிறகு நீ வாங்க சொன்ன பொருள் எல்லாம் கரெக்டா இருக்கான்னு வந்து பாரும்மா என மகா கோடீஸ்வரி இடம் சொல்ல நானும் பிரபாவும் வரோம் என கோளீஸ்வரி சொல்கிறார் ஐஸ்வர்யா நானும் வரேன் என்று சொல்ல..

மகா நீ இங்கே இரு நீ வெளியே வர வேண்டாம் என்று சொல்ல நான் ஏன் வெளியே வரக்கூடாது என் மேல உனக்கு பொறாமை என்று சொல்ல கோடீஸ்வரி மகாவை இனிமே எதுவும் சொல்ற.. வேல வச்சுக்காத இந்த வாழ்க்கை உனக்கு கிடைச்சிருக்கா அதுக்கு காரணமே மகா தான், அவள பாத்து நீயும் எப்படி நல்லா வாழனும்னு கத்துக்க என்று சொல்கிறார்.

பிறகு ஐஸ்வர்யா எல்லோரும் என்னை எவ்வளவு அசிங்கப்படுத்துறீங்க கௌதம் கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு அப்புறம் அப்பாவது அம்மாவாது அப்புறம் உங்களை வச்சுக்கிறேன் என்று சொல்கிறார். பிறகு ரூமில் யாரும் இல்லாமல் ஐஸ்வர்யா தனியாய் இருக்கிறார் அதை வெளியில் இருந்து கைலாஷ் பார்த்துவிட்டு இப்பதான் கரெக்டான நேரம் போய் கடத்திடலாம் என்று ஜூஸ் ஓட போகிறார் அப்பொழுது ஐஸ்வர்யாவோட பெரியம்மா அங்க வந்து ஏன் நீ பாட்டுக்கு உள்ளவரை என்று சத்தம் போடுகிறார்.

ஐஸ்வர்யாவும் உள்ள வரலாமான்னு கேட்டுட்டு வரமாட்டியா நான் உன்னை ஜூஸ் கேட்டேனா வெளியே போ என்று கைலாஷை திட்டி வெளியே அனுப்புகிறார்.. நைட்டு கௌதம் வீட்டில் விஜய் கல்யாண வீட்ல எல்லாரும் இவ்ளோ அமைதியா இருக்கீங்க இப்ப மெஹந்தி பங்க்ஷன் எவ்வளவு ஜாலியா இருக்கணும் இங்கே இருக்கிற ஒவ்வொரு கணவனும்..

aaha kalyanam
aaha kalyanam

அவங்க பொண்டாட்டி கையில அவங்க இனிஷியல மெஹந்தி போடணும் என்று சொல்ல முதலில் தாத்தா பாட்டி கையில் மஹதி போடுகிறார் அவரை தொடர்ந்து எல்லோரும் அவர்களது மனைவி கையில் மெஹந்தி போடுகின்றனர்.. பிறகு விஜய் சூர்யாவை பார்த்த நீ மட்டும் தனியாக கிளம்பிடலாம்னு பாக்குறியா மெஹந்தி போடுங்க என்று சொல்ல சூர்யாவும் மகா கையில் மெஹந்தி போடுகிறார்.

பிறகு கௌதமை ஐஸ்வர்யா கையில் மெஹந்தி போட சொல்கின்றனர். அதற்கு கௌதம் நான் வெண்ணிலா கைல அவ பேரு மெஹந்தி போட வேண்டியது இந்த ஐஸ்வர்யா கையில மெஹந்தி போட வேண்டியது இருக்கு என மனதுக்குள் நினைத்து விட்டு ஐஸ்வர்யா கையில் மெஹந்தி போடுகிறார்.. பிறகு எல்லோரும் ஜாலியாக பேசிக் கொண்டிருக்கின்றனர் இதோடு இன்றைய எபிசோட் முடிந்துள்ளது.