படுக்கைக்கு பால் எடுத்து சென்ற மகா.. சூர்யா சொன்ன அந்த வரத்தை… கடுப்பாகும் ராஜலெட்சுமி.. ஆஹா கல்யாணம் இன்றைய எபிசொட்

aaha kalyanam january 22
aaha kalyanam january 22

aaha kalyaanam today episode january 22 : ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோடில் சூர்யா தனது வாட்சிடம் புலம்பி கொண்டிருக்கிறார். டைனிங் காலில் மஹாவின் புடவையை ஏன் பிடித்து இழுத்தாய் என கேட்கிறார். இதனால் அம்மா இன்னும் என் மேல் கோபமாக போகிறார் என புலம்புகிறார்.

உடனே மகா பூ வைத்துக்கொண்டு  பால் கிளாசூடன் ரூமுக்கு வருகிறார். சூர்யா அதை பார்த்துவிட்டு உன் கிட்ட கொஞ்ச நாள்  பொருன்னு சொன்னேன்ல , நான் கொஞ்சம் கொஞ்சமா மாறிக்கிட்டு இருக்கேன் அதுக்குள்ள என்ன என கேட்கிறார் அதற்கு நான் என்ன செய்ய பாட்டி கொடுக்குறாங்க நான் வேணாம்னு சொன்னா பாட்டி ஏதாவது சந்தேக படுவாங்க அதான் எடுத்துட்டு வந்துட்டேன் என்ன சொல்கிறாள்.

வெண்பாவை வெளியூருக்கு அழைத்துச் சென்ற ஜீவானந்தம்.! குணசேகரனிடம் அருவாளை கொடுத்து வெட்ட சொன்ன விசாலாட்சி…

பின்னர் அடுத்த நாள் காலையில் அனைவரும் பூஜை ரூமில் சாமி கும்பிடுவதற்காக இருக்கின்றனர். ஐஸ்வர்யா இன்று பூஜை செய்வதாக பாட்டியிடம் கூறியிருந்தால் ஆனால் அனைவரும் அவருக்காக காத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் லேட்டாக செல்கிறார். வீட்டில் இருந்த மற்றவர்கள் மகாவையே பூஜை பண்ண சொல்கிறார்கள்.

ஐஸ்வர்யா என்ன இந்த வீட்டில் யாரும் மதிப்பதே இல்லை எதற்காக இவளை பூஜை செய்ய சொன்னீங்க என கேட்கிறாள் அதற்கு சூர்யா நீ லேட்டா வந்த அதனால தான் பாட்டி மகாவ பூஜை பண்ண சொன்னாங்க இதுல பாட்டி மேலேயும் தப்பு இல்ல மகா மேலையும் தப்பு இல்ல என ஐஸ்வர்யாவிடம் கூறுகிறார்.

ஆயிரம் சர்ச்சை வந்தாலும் பரவாயில்லை மகனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு எமோஷனலான பதிவு செய்த நயன்தாரா..

உடனே சூர்யாவின் சித்தி இன்னைக்கு மகா பூஜை செய்ததை விட சூர்யா மகாவுக்கு சப்போர்ட் செய்ததுதான் சிறப்பு என சொல்கிறார். உடனே ராஜலட்சுமி,  ஐஸ்வர்யா, கௌதம் என அனைவரும் கடுப்பாகின்றனர்.

இதற்கிடையில் அனாமிகாவை காண்பிக்கின்றனர். அனாமிகாவின் அப்பா அனாமிகாவிடம் நீ விஜய்யை காதலிக்கிறாயா என கேட்கின்றார். உன் முகத்திலேயே தெரியுது என மகளின் காதலுக்கு சப்போர்ட் செய்கிறார். இங்கு விஜய்யும் அனாமிகாவை நினைத்து  கொண்டிருக்கிறார்.

விஜய் மஹாவின் தங்கைக்கு போன் பண்ணுகிறார் அதே சமயத்தில் அனாமிகாவும் விஜய்க்கு போன் பண்ணுகிறார் உடனே இரண்டு பேரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். இதனால் மஹாவின் தங்கச்சி விஜய்யின் மேல் பொசசிவ் ஆகி அவருக்கு போன் பண்ணிக்கொண்டிருக்கிறார். ஆனால் விஜய்யோ அந்த போன் காலை கண்டும் காணாமலும் அனாமிகாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.