ஏழு விருதுகளை தட்டி தூக்கிய ஒத்த சீரியல்.! மொத்த சேனலையும் அலறவிட்ட சன் டிவி…

திரையரங்கிற்கு சென்று படத்தை பார்ப்பதை விட தொலைக்காட்சியில் சீரியலை பார்ப்பதை தான் மக்கள் அதிகமாக விரும்பி பார்க்கிறார்கள் அதே போல் வீட்டில் ரிலாக்ஸ் ஆக இருந்து கொண்டு ஒரு சில சீரியலை பார்ப்பது பல மக்களுக்கு மகிழ்ச்சி தான் அந்த வகையில் இளம் தலைமுறையினர் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் சீரியலை விரும்பி பார்க்கிறார்கள்.

அதேபோல் ஒவ்வொரு தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்படும் சீரியல்கள் பலத்த போட்டியை சந்தித்து வருகிறது அந்த வகையில் சேனல்களுக்கு இடையே போட்டிகள் நடப்பதை நாம் பார்த்து வருகிறோம், ஆனாலும் சீரியல்களின் எஜமான் என்றால் அது சன் டிவி தான் அன்றிலிருந்து இன்று வரை மக்கள் மனதில் சிம்மாசனமாக இருந்து வருகிறது.

ஒரு நாளைக்கு 15 சீரியலுக்கு மேல் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் சில சீரியல்கள் தான் டிஆர்பி யில் அதிக இடத்தை பிடித்து வருகிறது அந்த வகையில் அதிகம் பார்வையாளர்களைக் கடந்த சீரியல்கள் டிஆர்பி யில் அதிக ரேட்டிங் கிடைக்கும் அந்த வகையில் 2023 ஆம் ஆண்டுக்கான சின்னத்திரை விருதுகளை ஆனந்த விகடன் வழங்கி இருக்கிறார்கள்.

அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் ஒரே ஒரு சீரியல் மட்டும் ஏழு விருதுகளை தட்டிச் சென்றுள்ளது அந்த ஒரே ஒரு சீரியல் 2023 ல் மொத்த தொலைக்காட்சி சேனல்களையும் ஆக்கிரமித்துள்ளது ஆனால் 2024 இல் அந்த சீரியலை அவசர அவசரமாக முடித்து விட்டார்கள் சன் டிவி. அது வேற எந்த சீரியலும் கிடையாது எதிர்நீச்சல் தான்.

எதிர்நீச்சல் சீரியலில் நடித்த ஈஸ்வரி பெஸ்ட் சப்போர்ட்டிங் ஆக்டர்ஸ் என்ற விருதை தட்டிச் சென்றார், அதனைத் தொடர்ந்து நந்தினி சிறந்த நகைச்சுவை நடிகை விருதையும், சந்தானம் சிறந்த ஒளிப்பதிவு விருதையும், சிறந்த சீரியல் எதிர்நீச்சல், சிறந்த இயக்குனர் திருச்செல்வம் சிறந்த நகைச்சுவை நடிகர் கரிகாலன், என ஆறு விருதுகளையும் எதிர்நீச்சல் சீரியல் மட்டுமே வென்றுள்ளது.

அதேபோல் 2023 ஆம் ஆண்டு அதிக அளவில் பிரபலமாக பேசப்பட்ட ஒரே ஒரு நடிகர் மாரிமுத்து என்கின்ற குணசேகரன் தான் அதற்காக டெலிவிஷன் டாக் ஆப் தி இயர் என்ற விருதை கொடுத்துள்ளது. ஆனால் தற்பொழுது எதிர்நீச்சல் சீரியல் முடிந்துவிட்டது மறுபடியும் திருச்செல்வன் ஒரு நல்ல கதையுடன் மீண்டும் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.