2.0 திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க மறுத்த முன்னணி நடிகர்..?பல வருடம் கழித்து உண்மையை உடைத்த ஷங்கர்..

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் நிலவி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது கமலஹாசனை வைத்து இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார் இந்த திரைப்படம் வருகின்ற ஜூலை 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தியன் 2 திரைப்படம் பல பிரச்சினைகளைத் தாண்டி ஒரு வழியாக ரசிகர்களை மகிழ்விக்க வெளியாக இருக்கிறது. படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் பிரமோஷன் பணிகளில் மிகவும் தீவிரம் காட்டி வருகிறார்கள் பட குழு. இந்தியன் 2 பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷங்கர் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அவர் கூறியதாவது சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியாகிய 2.0 திரைப்படத்தை பற்றி சில வார்த்தைகள் பேசினார் அதில் கமல் அந்த திரைப்படத்தில் நடிக்க மறுத்ததை பற்றி கூறியுள்ளார் 2.0 திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக அக்ஷய் குமார் நடித்திருந்தார். படம் வெளியாகி பட்டையை கிளப்பியது.

அதுமட்டுமில்லாமல் ரஜினிக்கு வில்லனாக அக்ஷய்குமார் மிரட்டி இருந்தார் ஆனால் அந்த ரோலில் முதன்முதலாக நடிக்க இருந்தது நடிகர் கமல் தானாம் முதலில் கமலை நடிக்க வைக்க சங்கர் முடிவெடுத்தார் ஆனால் கமல் வேறொரு திரைப்படத்தில் மிகவும் பிசியாக நடித்து வந்ததால் அவரை நடிக்க வைக்க முடியாமல் போனது அதன் பிறகு தான் அந்த கதாபாத்திரத்திற்கு அக்ஷய குமாரை சங்கர் தேர்ந்து எடுத்ததாக கூறியுள்ளார்.