பாண்டியா ரொம்ப தலையில தூக்கி வெச்சிட்டு கொண்டாடுனியே இப்ப தங்கமயில் வச்சா பாரு ஆப்பு.. பாக்கியம் போட்ட சதி திட்டம்..

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இன்றைய எபிசோடில் மூன்று ஜோடிகளும் ஹனிமூன் செல்லுங்கள் என பாண்டியன் கூறிவிடுகிறார். அதனால் மூன்று பேரும் கிளம்புவதற்கு ரெடியாக இருந்தார்கள் ஆனால் கடைசி நேரத்தில் மீனா மற்றும் ராஜி இருவரும் சென்னைக்கு வரவில்லை என முடிவு செய்து எப்படியாவது பாண்டியனிடம் சொல்ல வேண்டும் என முயற்சி செய்கிறார்கள்.

அந்த சமயத்தில் பாண்டியன் வர அப்பொழுது அனைவரும் உட்கார்ந்து கொண்டு பேசிக் கொண்டிருக்கும் பொழுது வீட்டில் உள்ள அனைவரும் பாண்டியன் கூப்பிடுகிறார் அந்த சமயத்தில் முருகேசன் மாமா கடைக்கு வர லேட் ஆகும் அதனால் நீயும் செந்திலும் போய் கடையை திறந்து விடுங்கள் என கூறி விடுகிறார். உடனே சரி எனக் கூறிவிட்டு அவரவர்கள் வேலையை பார்க்க கிளம்பும் நேரத்தில் மீனா இடையில் குறிப்பிட்டு ஒன்று சொல்ல வேண்டும் என கூறுகிறார்.

அப்பொழுது மீனா பாண்டியனிடம் ஒரு வருடத்திற்கு இத்தனை நாள் தான் லீவு எடுக்க வேண்டும் என்ற கணக்கு இருக்கிறது அதனை நான் எடுத்து விட்டேன் அதனால் என்னால் லீவு இதுக்கு மேல் எடுக்க முடியாது அதனால் சென்னைக்கு போகவில்லை எனக் கூறுகிறார். அதே போல் ராஜியும் நான் இப்பொழுதுதான் கோச்சிங் கிளாஸ் சேர்ந்துள்ளேன் அதனால் என்னாலும் போக முடியாது எனக் கூறுகிறார்.

இதனால் பாண்டியன் கோமதி இடம் கோபப்பட்டு பார்த்தியா நான் சொல்றதுக்கு நீ என்ன சொல்றது நான் என்ன கேட்கிறது என்பது போல் நடந்து கொள்கிறார்கள் என கோபப்பட்டு கிளம்புகிறார். அப்படி இருக்கும் நிலையில் புதிய புரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது அப்பொழுது வீட்டில் பாண்டியன் உட்கார்ந்து கொண்டிருக்கும் பொழுது எந்த ஹோட்டலில் ரூம் போடுவது என கேட்டுக் கொண்டிருக்கிறார் .

அந்த சமயத்தில் தங்கமயில் அவசர அவசரமாக 5000 ரூபாயில் ஒரு ஹோட்டல் ரூம் இருக்கிறது அதனை புக் செய்து விடலாமா சாப்பாடு எல்லாம் ஃப்ரீ என கூறுகிறார் உடனே பாண்டியன் யோசித்து விட்டு சரி அதையே புக் செய்து விடு என பேசுகிறார். அதை புக் செய்துவிட்டு ரூமில் இருக்கும் பொழுது சரவணன் இதற்கு மேல் அப்பாவுக்கு செலவு வைக்கக்கூடாது ஐந்தாயிரம் ரூபாய்க்கு மேல் எக்ஸ்ட்ரா எதுவும் கேட்கக் கூடாது என பேசுகிறார்.

பிறகு தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது திடீரென போனை பார்க்கும் பொழுது போனில் ரூம் ரெண்ட் 20 ஆயிரம் என வருகிறது இதனால் அதிர்ச்சி அடைகிறார் தங்கமயில் அந்த சமயத்தில் தங்கமயில் தன்னுடைய அம்மாவிற்கு போன் செய்து நான் 5000 ரூபாய் என்று புக் செய்தேன் ஆனால் 20000 ரூபாய்க்கு மேல் காட்டுகிறது என பேச இப்பொழுது எதுவும் பேசாத சென்னைக்கு கிளம்பி போ என தங்கமயில் அம்மா ஐடியா கொடுக்கிறார் அதை நம்பிக்கொண்டு தங்கமயிலும் இதை பாலோ பண்ணுகிறார்.

இதனால் தங்கமயில் அதிர்ச்சியில் இருக்கிறார் இத்துடன் ப்ரோமோ முடிகிறது.